முத்துப்பேட்டை எல்.ஐ.சி கிளையில் ஜீவன் லக்ஷ்யா பாலிசி அறிமுக விழா கிளை மேலாளர் வேங்கடராமகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது.
புதிய ஜீவன் லக்ஷ்யா பாலிசியை பத்திரிகையாளர் முகைதீன் பிச்சை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி நிர்வாக அதிகாரி சக்திவேல், வளர்ச்சி அதிகாரி பார்த்தசாரதி, முகவர் ராஜேந்திரன் மற்றும் எல்.ஐ.சி அலுவலர்கள், முகவர்கள் கலந்துக்கொண்டனர். அப்பொழுது கிளை மேலாளர் வேங்கடராமகிருஷ்ணன் கூறுகையில்;: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீவன் லக்ஷ்யா என்னும் இப்புதிய பாலிசி ஒரு குறிப்பிட்ட காலம் பிரீமியம் செழுத்தி லாபத்தில் பங்கு கொள்ளக்கூடிய என்டோவ்மென்ட் திட்டமாகும். இத்திட்டத்தில் 18-வயது முதல் 50 வயது பூர்த்தியானவர்கள் வரை சேரலாம். அதிகப்பட்ச முதிர்வு வயது 65ஆகும். பாலிசின் குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள். அதிகப்பட்ச பாலிசி காலம் 25 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீட்டு தொகை ரூபாய் ஒரு லட்சம் ஆகும். பாலிசிதார் இடையில் இறந்தால் அவர் இறந்த நாளில் இருந்து ஒவ்வொரு பாலிசி ஆண்டின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பாலிசி முடியும் தேதியின் முந்தைய ஆண்டு வரை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்தினால் கடன் வழங்கப்படும். இதில் பல்வேறு சலுகைகள் உள்ளன எனவே மக்கள் இந்த அருமையான திட்டத்தில் தங்கள் இணைந்து பயன் பெறுங்கள் இவ்வாறு வேங்கடராமகிருஷ்ணன் கூறினார்.
