அதிரையில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி
Posted March 06, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகில் உள்ள பேய்க்கலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் சதீஷ்குமார் வயது 13 இவர் அதிராம்பட்டினம் காதர் முகைதீன்
பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் நசுவினி ஆற்றில் குளிக்கச் சென்றான் அப்போது மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென சதிஷை காணவில்லை இதையடுத்து சதீஷின் நண்பர்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் தெரிவித்தனர் பின்னர் தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காணமல் போன மாணவனை தேடினர் அப்போது மேல மங்கனங்காடு பகுதியில் ஆற்றின் ஓரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சதீஷை மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவ மனைக்குக்கொண்டு சென்றனர் அங்கு மாணவனின் உடலைப்பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததையடுத்து சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்
0 comment(s) to... “அதிரையில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி”