முத்துப்பேட்டையில் நேற்று காலை 10 மணி வரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் கடுமையான வெயில் தாக்கியது. 10 மணிக்கு பிறகு
திடீரென்று வானத்தில் மேகம் மூட்டம் கருகத்தொடங்கி மழைக்காலம் போல் இருண்டது. பின்னர் 10.30 மணிக்கு தூரலுடன் துவங்கிய மழை பகல் 2 மணி வரை இடைவிடாமல் கனமழையாக பெய்து கொட்டித்தீர்த்தது. இதனால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. நகரில் உள்ள பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் குளத்தில் வடிய முடியாமல் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பழைய பேருந்து நிலையம், கார் ஸ்டான்ட், ஆசாத்நகர், புதிய பேருந்துநிலையம் பகுதிகளில் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் அடைப்பட்டு கிடப்;பதால் மழை தண்ணீர் வடிய முடியாமல் சாலையில் முட்டிக்கால் அளவிற்கு தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நீரில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் தேங்கி கிடந்த மழை நீரால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் வடிய பேரூராட்சி நிர்வாகம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களே தேங்கிய மழை நீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கார் ஸ்டான்டில் தேங்கிய மழை நீரை தி.மு.க பேரூராட்சி கவுன்சிலர் அய்யபன் தலைமையில் பொதுமக்கள் மழைநீரை வெளியேற்றும் பணியை ஈடுப்பட்டனர். இருந்தும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பணி நிறைவு பெறவில்லை. கனமழையால் நகரில் பொதுமக்கள் நடமாட்டமின்றி மாலை வரை வெறிச்சோடி காணப்பட்டது.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை