குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல். 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

Posted March 13, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த பண்ணைபொது,
எக்கல், கடம்பைவிளாகம், விநோபா பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி நேற்று காலை பாண்டி கடைதெருவில் ஊராட்சி மன்ற ஊறுப்பினர் முத்துமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வீரமணி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்ப்பட்டவர்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி அம்பிகாபதி மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து விரைவில் அப்பகுதியில் குடிநீருக்காக சுமார் 1500 மீட்டர் தூரம் பைப் அமைக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி கூறியதால் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் சாலை மறியலை விளக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.\

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


படம்செய்தி

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த பண்ணைபொது, எக்கல், கடம்பைவிளாகம், விநோபா பகுதியில் கடந்த ஒருமாதமாக குடிநீர் வரவில்லை எனக்கூறி நேற்று காலை பாண்டி கடைதெரு திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஊராட்சி மன்ற ஊறுப்பினர் முத்துமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வீரமணி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்ப்பட்டவர்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.


0 comment(s) to... “குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல். 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!”