முத்துப்பேட்டையில் ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி

Posted March 05, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் முஸ்தாக். டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி மர்ஜி குணா (25).

இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று மர்ஜி குணா சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்தது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து அவரது தாய் சாவித்திரி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தினார்.
news malaimalar


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி”