அதிராம்பட்டினத்தில்திமுக உறுப்பினர்கள் கூட்டம்
Posted March 16, 2015 by Adiraivanavil in Labels: DMK
14வது பொது தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூர் கழக நிர்வாகிகளாக அவைத் தலைவர் அப்துல்காதர், செயலாளர் ராமகுணசேகரன், துணை செயலாளர்கள் அன்சர்கான், தில்லைநாதன், அனிதாகாளியப்பன், பொருளாளராக கோடிமுதலி, மாவட்ட பிரதிநிதிகளாக முகமது மீராசா, இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகளாக முல்லைமதி, கான்முகமது, அப்துல் ஹலீம், வீரப்பன், மருதையன் ஆகியோர் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரையும் கட்சி பொறுப்பாளர்கள் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
2016 பொதுத் தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற தீவிர கவனம் செலுத்தி உழைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை விளக்கி பேரூர் கழக செயலாளர் ராம.குணசேகரன் பேசினார். கூட்டத்தில் பேரூர், வார்டு கழக, சார்பு அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். துணை செயலாளர் தில்லைநாதன் நன்றி கூறினார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில்திமுக உறுப்பினர்கள் கூட்டம்”