முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க தலைமை கழக பேச்சாளர் தஞ்சை வே.மன்னர் மன்னன், கும்பகோணம் அரசு போக்கு வரத்து கழகத்துக்கு அனுப்பி
உள்ள கோரிக்கை மனவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்ம், முத்துப்போட்டைக்கு தாலுக்கா தலைநகரம் திருத்துறைப்பூண்டி ஆகும். மக்கள் அங்கே செல்வதற்கு குறைவான பேருந்துகள் இயங்கி வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது. அதே போன்று மாவட்ட தலைநகரமான திருவாரூருக்கு முத்துப்பேட்டையிலிருந்து நேரடி பேருந்து வசதி கிடையாது. இதனால் பொதுமக்கள், அரசு அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு மிகவும் சிறப்பமாக உள்ளது. எனவே திருத்துறைப்பூண்டிக்கு செல்ல கூடுதல் பேரூந்துகள் இயக்க வேண்டும். அதே போல் முத்துப்பேட்டையிலிருந்து திருவாரூருக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் நாகை, சிதம்பரம், வேளாங்கண்ணி, அதே போல் தூத்துக்குடி ராமேஸ்வரம், மதுரை, திருவணந்தபுரம், ஏற்வாடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் முத்துப்பேட்டை நகருக்குள் வராமல் பைப்பாஸ் சாலை வழியாக செல்லுவதால் மக்கள் பேருந்துகளில் ஏற முடியாதநிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல முயற்சி செய்யவேண்டும். இதனை கண்காணிக்க முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நேரம் காப்பாளர் ஒருவரை நியமணம் செய்ய வேண்டும். இவ்வாறு தனது மனுவில் தஞ்சை வே.மன்னர் மன்னன் கூறியுள்ளார்.
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை