அதிரை அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலை

Posted March 11, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகேயுள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடரா ஜன். இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு சுதந்திரதேவி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த வீர
செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண் டார். இதனால் மகள் சுதந்திரதேவியுடன் பெற்றோர் பேச்சுவார்த்தையின்றி இருந்தனர்.இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரதேவி கர்ப்பமானார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரசெல்வத்தின் சகோதரி உஷாராணி சுதந்திரதேவிக்கு வளை காப்பு விழாவை தனது வீட்டில் நடத்தினர். இதில் சுதந்திரதேவியின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உஷாராணி குடும்பத்தினர் நேற்று காலை 100 நாள் வேலைக்கு சென்ற வசந் தாவை வழிமறித்து கட்டையாலும், கம்பியாலும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வசந்தா தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து உஷாராணி, அவரது கணவர் நாகூரான் மகன் தியாகு ஆகிய 3 பேரை தேடி வருகிறார்.


0 comment(s) to... “அதிரை அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலை”