பட்டுக்கோட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: முதியவர் மீது புகார்

Posted April 21, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: முதியவர் மீது புகார்பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கீழ தெருவை சேர்ந்த 17வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்ற 78 வயது
முதியவர் அவரது வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் அந்த பெண் தனியாக இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்று வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுள்ளார்.
தண்ணீர் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த அந்த பெண் முதியவர் தாழ்பாளை போட்டு வீட்டிற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பெண் அவரை வெளியே போகுமாறு கூறியுள்ளார். அப்போது அந்த முதியவர் அந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து அலறியபடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்த பெண்ணிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது முதியவர் ஒருவர் தன்னை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை பிடிப்பதற்காக இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த முதியவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தாய் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற அந்த முதியவரை தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை முதியவர் கற்ப்பழிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
news by malaimalar


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: முதியவர் மீது புகார்”