கோடை விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்-(படங்கள் இணைப்பு)

Posted April 10, 2015 by Adiraivanavil in Labels:
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்பநிலை சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை
கொள்ளை கொள்கிறது.
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வறுத்தெடுப்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
பள்ளிகளில் இன்றுடன் தேர்வுகள் முடிந்து நாளை(சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே நாளை முதல் ஊட்டி, குன்னுருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.
சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்குவதற்கு வசதியாக நீலகிரியில் உள்ள லாட்ஜுகள், ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வழக்கமாக 1000 ரூபாய் வாடகையுள்ள அறை தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு முன்பதிவாகி உள்ளது.
இதேபோல் காட்டேஜூகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பங்களாக்களின் வாடகையும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுதான் இப்படி என்றால் உணவுப் பண்டங்களின் விலையும் தாறுமாறாக உயரத்தொடங்கியுள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தக்கூடாது.
பார்க்கிங் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். ஊட்டி நகராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.










0 comment(s) to... “ கோடை விடுமுறையால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்-(படங்கள் இணைப்பு)”