மதுக்கூர் ஒன்றியம், அத்திவெட்டி மரவக்காடு கிராமத்தைச்
சேர்ந்த செல்லமுத்து மகன் மனோகரன் (45). இவர் பரக்கலக்கோட்டையில் தனியார் ஒருவரிடம் டிராக்டர்
ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தேங்காய்களை ஏற்றி வருவதற்காக மனோகரன் தாமரங்கோட்டைக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். தாமரங்கோட்டை ஏரிக்கரை
அருகே சென்றபோது, எதிர்பாராமல் அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் டிராக்டர் உரசியதாம்.
இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மனோகரன் அதேயிடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.