அதிராம்பட்டினம் அருகே அம்மைநோய் கண்காணிப்பு தீவிரம்

Posted April 10, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ளசேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் அம்மை நோய் கண்காணிப்பு பணி
தீவிரமாக நடந்து வருகிறது. வட்டார மருத்துவ அலு வலர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அழகியநாயகிபுரம், ஊமத்தநாடு, குருவிக்கரம்பை, பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், களப்பணியாளர்கள் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை மேல்சிகிச்சைக்கு அனுப்பும் பரிந்துரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மாசு பாட்டை தவிர்க்க, குடிநீரில் குளோரி னேஷன் ஆய்வு, குடிநீர் குழாய்களில் விரிசல் கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
கழனிக்கோட்டை கிராமத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவ லர் சுபாஷ் சந்திரபோஸ், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பாலகுமார், ராகுல், சுகாதார ஆய்வாளர் நல்லதம்பி, கிராம சுகாதார செவிலியர் கவிதா ஆகியோர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
அம்மைநோயால் பாதித்தவர்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்த வேண்டும். அம்மைநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏசைக்ளோவிர் மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக் களுக்கு அம்மை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்றுநோய் ஏற்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே அம்மைநோய் கண்காணிப்பு தீவிரம்”