மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்

Posted April 07, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் கீழக்காடு பகுதியைச்
சேர்ந்தவர் தங்கராசு(59). இவர் நேற்று தனது வீட்டு பின்புறம் 100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிந்தார். மாலை வேலை முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் தங்கராசு மட்டும் வீட்டு பின்புற பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது வாய்க்காலுக்கு மேலே சென்ற மின் கம்பி திடீரென்று அறுந்து தங்கராசு மீது விழுந்தது.
இதில் அவரை மின்சாரம் தாக்கியது. சத்தம் கேட்ட மருமகள் நதியா(25) தனது மகள் சந்தியா(4)வை தூக்கியவாறு மாமனாரை காப்பாற்ற முயன்றார். அப்பொழுது அவரும் குழந்தையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 comment(s) to... “மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்”