பார்த்து மனம் நெகிழ்ந்த புகைப்படம் இரண்டு உங்கள் பார்வைக்கு!
Posted April 10, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
இது எத்தனையோ இளைஞர்கள், பெரியவர்கள் (அங்கச் சுத்தி) உளூ என்றால் என்னவென்றும் தொழுகையின் பக்கமும் வராமலிருக்கும் போது இந்த சிறுவன் எவ்வளவு அழகாக உளூ எடுக்கிறான் பாருங்கள்.
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) 'உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்' என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத் நூல்: புகாரீ 165
--------------------------------------------------------
இறைவன் மிகப்பெரியவன்....!!
இஸ்லாமியர்களுக்கு தொழுகை எந்த சூழ்நிலையிலும் குறித்த நேரத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.
பள்ளி பாட சாலையிலும் தம்முடைய தொழுகையை நிறைவேற்றும் இந்த சிறுவனை காணும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
நன்றி : சேலம் ஜாஃபர்
0 comment(s) to... “பார்த்து மனம் நெகிழ்ந்த புகைப்படம் இரண்டு உங்கள் பார்வைக்கு!”