அரிய வகை பறவை குஞ்சு சிக்கியது. வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்.

Posted April 21, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெருவில் நேற்று காலை பறவைகள் இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்'
பறவை குஞ்சி 2 சாலையில் தத்தி சென்றது. அப்பொழுது அந்த பகுதியில் சென்ற த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி என்பவர் அதனை பிடித்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டு முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடன் மன்னார்குடி சரக வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு படி முத்துப்பேட்டை வனவர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பொழுது வனத்துறையினரிடம் 2 முக்களிப்பான் குஞ்சுகளை த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார். அதனை பெற்ற வனத்துறையினர் அதற்கு முதல் உதவி அளித்து உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர்.

படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் நேற்று இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்' பறவை குஞ்சி 2 சாலையில் சென்றது. அதனை மீட்டு வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்


0 comment(s) to... “ அரிய வகை பறவை குஞ்சு சிக்கியது. வனத்துறையினரிடம் த.மு.மு.க நிர்வாகி பாக்கர் அலி ஒப்படைத்தார்.”