அதிரை அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted April 17, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே உள்ளமல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் என்ற இடத்தில் கடற்கரை அருகே உள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில்
, அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடந்தது.
         55 வயது மதிக்கத்தக்க இறந்து கிடந்த நபர் வெள்ளை சட்டையும், கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்தார். அருகிலேயே மது பாட்டிலும், பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது.
      தகவல் அறிந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தார். இறந்த நபர் குறித்தும், எப்படி இறந்தார் என்பது குறித்தும் 
காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


0 comment(s) to... “அதிரை அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு ”