பட்டுக்கோட்டை விவசாயி வீட்டில் 25 பவுன், பணம் கொள்ளை பட்டப்பகலில் ஓட்டை பிரித்து கைவரிசை

Posted April 10, 2015 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யாக்கண்ணு(60), விவசாயி. தென்னந்தோப்புக்குள்
இவரது வீடு உள்ளது. இவ ரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் கார்த்திகேயன் சிங்கப்பூரில் இன்ஜினியராக இருக்கிறார்.
அய்யாக்கண்ணு தம்பதியர் தினமும் காலை 10 மணிக்கு வயலுக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு பின்னர் தான் வீடு திரும்புவார்கள். வழக்கம்போல நேற்றும் வளவன்புரத்தில் உள்ள வயல்காட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காண வில்லை. இன்னொரு இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோ திறக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டின் பின்பக்க அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் இறங்கி இந்த துணிகர திருட்டை நடத்தி உள்ளனர். போகும் போது அதே வழியாக ஏறி தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அய்யாக்கண்ணு பட்டுக்கோட்டை தாலுகா போலீ சில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தஞ்சையில் இருந்து மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மெயின் ரோட்டுக்கு வந்தது.. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை விவசாயி வீட்டில் 25 பவுன், பணம் கொள்ளை பட்டப்பகலில் ஓட்டை பிரித்து கைவரிசை”