கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகளை தடுக்க கருவேல மரங்களை அகற்றுங்கள் பொதுமக்கள் கோரிக்கை
Posted April 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்க கருவேல மரங்களை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேதுபாவாசத்திரம் வழியாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலைகளில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில் செல்லக்கூடிய வாகனங்கள் நேரத்தை கணக்கில் கொண்டு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் வேலிக்கருவை மரங்கள் வளர்ந்து மூடியுள்ளதால் வளைவான சாலைகளில் முன்னும் பின்னும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வேலி கருவைகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நினைப்பதும் கிடையாது. கண்டுகொள்வதும் இல்லை.
கடந்த காலங்களில் ஆங்காங்கே சோதனைச்சாவடி அமைத்து இரும்பு தடுப்பு கேட்டுகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டது. தற்போது சோதனைச்சாவடிகளும் கிடையாது. தடுப்பு கேட்டுகளும் இல்லை. கொள்ளுக்காடு துவங்கி கட்டுமாவடி கணேசபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் 100க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் கிராமப்புறங்களிலிருந்து வந்து சேர்கிறது. இந்த சாலைகள் இணையும் இடங்களில் பட்டா நிலங்கள் உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் தெரியாதவாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் இல்லாத சாலைகளில் வேலிக்கருவை வளர்ந்து
மூடியுள்ளது. இதனால் இணைப்பு சாலைகளிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடையும் வாகனங்கள் அதில் வரக்கூடிய வாகனங்களை பார்ப்பதற்குள் விபத்துகள் ஏற்படுகிறது. இதுவரை இந்த பகுதிகளில் விபத்துகளால் 20க்கும் மேற்பட்ட உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் தொடர்ந்து வரும் விபத்துகளை தடுக்க வேண்டுமென்றால் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற வேண்டும். அதேபோல் இணைப்பு சாலைகள் அனைத்திலும் உள்ள வேலிகருவை மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர் விபத்துகளை தடுக்க கருவேல மரங்களை அகற்றுங்கள்
பொதுமக்கள் கோரிக்கை
0 comment(s) to... “கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகளை தடுக்க கருவேல மரங்களை அகற்றுங்கள் பொதுமக்கள் கோரிக்கை”