கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. பேரூராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் டையலாக்

Posted April 07, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற மாதந்திர கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். துணைத்
தலைவர் அப்துல் வகாப், செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்களின் காரச்சார விவாதம் நடைபெற்றது. இதில் முதலில் காங்கிரஸ் கவுன்சிலர் பேசுகையில்: மற்ற வார்டுகளுக்கு செய்யும் பணிகளை போன்று எனது வார்டுக்கும் செய்ய வேண்டும். எனது வார்டுக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெரு பகுதியில் வடிக்கால் அமைத்து தர சுமார் 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறேன். செய்து தந்த பாடியில்லை. எனக்கே அழுத்து போய் விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அதனால் நான் ஒரே ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் தானே என்று நினைத்து விட வேண்டாம். வார்டு மக்களை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்டு வர முடியும் என்றார். 9-வது வார்டு உறுப்பினர் பாவா பகுருதீன் பேசுகையில்: கடந்த ஆண்டு எனது வார்டில் பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர் இதுநாள் வரை பணியை துவங்கவில்லை. அப்படி இருக்கும்பொழுது வேறு பகுதியில் அந்த ஒப்பந்தகாரருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்? சட்டத்தில் இடம் உண்டா? என்று கேள்வி எழுப்பி பேசினார். 7-வது வார்டு உறுப்பினர் ஜெகபருல்லா பேசுகையில்: அந்த ஒப்பந்தக்காரருக்குதான் பணியை கொடுக்க வேண்டும் என்று வழியுறுத்தி பேசினார். இது போன்று மற்ற உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் நாசர், அய்யப்பன், கிருஷ்ணன், தம்பி மரைக்காயர் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. பேரூராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் டையலாக்”