அதிரை அருகே தொடர் மின்வெட்டால் கோடை சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை
Posted April 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப�பள்ளம், மரக்காவலசை, வீரியங்கோட்டை, முடச�சிக்காடு, கைவனவயல், பூக்கொல்லை, கழனிவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு போகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுவது வழக்கம். அதேநேரம் கோடையில் 100 ஹெக்டேருக்குமேல் கோடை சாகுபடி செய்வதுண்டு. மும்முனை மின்சாரம் 10 முதல் 12 மணி நேரம் வரை வழங்கப�பட்டு வந்தது. இந�த மின்சாரத்தை நம்பி கோடை சாகுபடி செய�வோம் என்ற நம்பிக்கையில் பல்வேறு பகுதிகளில் நாற�று விடப்பட்டது. ஆனால் திடீரென கடந�த 15 நாட்களுக்கு மேலாக மும்முனை மின்சாரம் எந்தவித முன்னறிவிப்பின்றி 3 மணி முதல் 6 மணி நேரம் கூட முழுமையாக கிடைக்கவில்லை.
இதனால் கோடை சாகுபடிக்கு விடப�பட்ட நாற�றுகள் அனைத்தும் நடவு செய்ய முடியாமல் பல்வேறு இடங்களில் மாடு விட்டு மேய�க்கும் நிலை ஏற�பட்டுள்ளது. கடைமடை பகுதியில் ஆண்டுதோறும் 100 ஹெக்டேருக்குமேல் கோடை சாகுபடி செய�வது வழக்கம். ஆனால் இந்தாண்டு இதுவரை 15 ஹெக்டேர் நிலப�பரபபில் மட்டுமே கோடை சாகுபடி நடந்துள்ளது. அதுவும் முழுமை பெறுமா என்பது சந�தேகம் தான் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
அதேநேரம் மார்கழி, தை மாதங்களில் தென்னைக்கு விவசாயிகள் உரம் வைப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டு மார்கழி, தை மாதங்களில் உரம் வைக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கோடையில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு போதுமான மின்சாரம் கிடைக்காததால் தென்னை மரங்களும் வாடி துவங்கியுள்ளது. இதனால் மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comment(s) to... “அதிரை அருகே தொடர் மின்வெட்டால் கோடை சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை”