பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம்
Posted April 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 24ம் துவங்கியது. திருவிழா நாட்களில் நாடியம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரடி தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார் கோயில் தெரு வழியாக பெரிய தெருவில் நிறுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாடியம்மனின் தேரோட்டம் இன்றும் மாலையில் நடக்கிறது. தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தீபாகாணிகேர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமை யில் போலீசார் செய்திருந்தனர்.0 comment(s) to... “பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம்”