அதிரை பகுதியில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியது மீன் விலை உயரும் அபாயம்

Posted April 15, 2015 by Adiraivanavil in Labels:
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் இன்று தொடங்கியது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் வகையில் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம்
இன்று தொடங்கியது. மே 29–ந் தேதி வரை தடை காலம் நீடிக்கிறது.
தடை காலத்தை யொட்டி தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
சிறு படகுகள் மூலம் கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறுகிறது. இதனால் மீன் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடல் பகுதியில் இன்று முதல் விசைப்படகு, இழுவை படகுகளில் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.


0 comment(s) to... “அதிரை பகுதியில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியது மீன் விலை உயரும் அபாயம்”