அதிரை அருகே அரசு பஸ் மோதி கணவன்–மனைவி பலி

Posted April 22, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அருகே உள்ள கட்டுமாவடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கணவன்–மனைவி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். 

இரவு 9 மணி அளவில் அவர்கள் வில்லுன்னிவயல் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென மொபட் மீது மோதியது. இதில் கணவன்– மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய அவர்கள் பெயர் விவரம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 comment(s) to... “அதிரை அருகே அரசு பஸ் மோதி கணவன்–மனைவி பலி”