ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்: தஞ்சை கலெக்டர் பேச்சு
Posted April 09, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இதுவரை நடைபெற்ற 9 கூட்டங்களில் பெறப்பட்ட விவாத பொருள்களின் மொத்தம் 160 பணிகளில் 112 பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 48 பணிகள் அனைத்துத் துறை அலுவலர்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கீட்டுக்கேற்ப விரைவில் நிறைவேற்றப்படும்.
மண் சாலைக்கு பதிலாக தார் சாலை பணிகள், ஏரிகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், ஆரம்ப சுகாதாரம் வளாகம் அமைத்தல், புதிய குடிநீர் தொட்டி அமைத்தல், தெரு விளக்கு வசதி, அங்கன்வாடி அமைத்தல், கால்நடை மருத்துவமனை அமைத்தல், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளுதல், பூங்காக்களை புதுப்பித்தல், உயர்மட்ட பாலங்கள் அமைத்தல், தடுப்பு சுவர்கள் அமைத்தல், சமுதாய கூடம் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் கட்டுதல் மற்றும் தார் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல், கழிவறைகள் அமைத்தல், புதிய பேருந்து நிழற்குடை கட்டுதல், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் சுப்பையன் பேசும்போது கூறியதாவது:–
எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவாக முடிக்கவும், தரமாக இருக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று ஏனைய பணிகளும் நிறைவேற்றப்படும். தஞ்சை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்டு தகவல் கொடுத்தால் ஒரு வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் செல்லக்கண்ணு, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடி தமிழரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் துரை.தியாகு, எஸ்.குலோத்துங்கன், கே.சூரியமூர்த்தி, செல்வராஜ் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 comment(s) to... “ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்: தஞ்சை கலெக்டர் பேச்சு”