அதிராம்பட்டினத்தில் பெண் மாயம்

Posted April 19, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தை அடுத்த நடுவிக்காடு கிராமம் ராஜா மடம்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் இவரது மகள் தேன்மொழி
(வயது 26), இவர் கடந்த 13–ந் தேதி வெளியில் சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
அவரது தந்தை வடிவேல் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மகள் தேன்மொழி கிடைக்காததால் இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பெண் மாயம்”