அதிரை அருகே பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியும் பணி துவக்கம்.

Posted April 11, 2015 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் அருகே  அனைவருக்கும் கல்வி இயக்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார வளமையங்களின் சார்பில் 2015-
16 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் பணி தொடங்கியுள்ளது.
        தஞ்சாவூர் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகளின் படி பேராவூரணிசேதுபாவாசத்திரம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையங்களின் சார்பில் ஒன்றியத்தில் உள்ள பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கணக்கெடுக்கும் பணி ஏப்ரல்மே-2015 ஆகிய மாதங்களில் நடக்கிறது.
           இதில் இடம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த 
முதல் 14 வரையுள்ள அனைத்து பள்ளி செல்லா குழந்தைகள்இடை நின்றவர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டுபள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
           இப்பணியில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்பள்ளி தலைமை ஆசிரியர்கள்வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்ஆசிரிய பயிற்றுநர்கள்சிறப்பு ஆசிரியர்கள்பள்ளி ஆசிரியர்கள்பள்ளி மேலாண்மை குழுகல்விக்குழுவினர்கல்வி தன்னார்வல அலுவலர்கள் அனைத்து குடியிருப்புகளிலும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

செய்தி எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.










0 comment(s) to... “அதிரை அருகே பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியும் பணி துவக்கம். ”