அதிரையில் முதல்வர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் பெண்; மரணம்
Posted December 05, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம். அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு காரிபுரத்தை கிராமத்தை சேர்ந்தவர்; கருப்பையன் அவர்கள் மனைவி பார்வதி வயது 55 இவர் நேற்றைய முன்தினம் மாலை தமிழக முதல்வர் ஜெயலாலிதவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலையடுத்து நேற்று முதல் மிகந்த சோர்வுடன் காணப்பட்டது இந்நிலையில் இன்று டி.வி. பார்த்துக்கொண்டிருந்த போது தழிழக முதல்வர் இறந்து விடடார் என்ற செய்தி வெளியானதை கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். பார்வதி எம்.ஜீ.ஆர் காலத்திலிருந்து தீவிர விஸ்;வாசியாக இருந்து வந்தார். இந்த செய்தியை கண்டதும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் பார்வதின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பார்வதி இறந்த சில நொடிகளில் தமிழக முதல்வர் மறைவு என்ற செய்திக்கு அப்போலோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது,

0 comment(s) to... “அதிரையில் முதல்வர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் பெண்; மரணம்”