அதிரையில் சபரிஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை (படங்கள்இணைப்பு)

Posted December 26, 2016 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம், டிச.26 

தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் வண்டிப்பேட்டை அருகில் பிரசித்தி பெற்ற சபரிஐயப்பன் கோவில் உள்ளது.

 இக்கோவிலில் சபரிமலை போன்ற ஐயப்ப சாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள்; கன்னி பூஜை, பெரிய பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்

. அதன்படி, இந்த சபரிஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கி, ஐயப்ப பக்தர்களின் கூட்டு கன்னி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

 இந்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

 இதையொட்டி, ஐயப்ப சாமிக்கு மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கன்னி பூஜை, சக்தி அழைத்தல், கருப்பன் அழைத்தல், படி பூஜை நடந்தது. இதையடுத்து, கோவிலில் திருவிளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 இதையொட்டி  அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயப்பன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கன்னி சாமிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். 
















0 comment(s) to... “அதிரையில் சபரிஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை (படங்கள்இணைப்பு)”