'ஆதார்' தராதவர்களுக்கு காஸ் மானியம் 'கட்'

Posted December 01, 2016 by Adiraivanavil in Labels:
வங்கி, காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' விபரம் தராதவர்களுக்கு, இன்று முதல், மானியத்தை நிறுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 
மத்திய அரசின், நேரடி மானிய திட்டத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானியத்தை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கின்றன. 
மானிய திட்டத்தில் இணைய, வாடிக்கையாளர், ஆதார் விபரத்தை, வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பலர் தராததால், நவ., 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆதார் விபரம் தராதவர்களுக்கு, இன்று முதல் மானியத்தை நிறுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 
எண்ணெய் நிறுவன அதிகாரி கூறியதாவது:ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து, அட்டை கிடைக்காதவர்கள், உரிய ஆவணம் மற்றும் உத்தரவாத சான்றுடன், காஸ் ஏஜன்சியில் வழங்கினால், மானியம் வழங்கப்படும். ஆதார் விபரம் தராதவர்களுக்கு, மானியம் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - news  by dinamalar 


0 comment(s) to... “'ஆதார்' தராதவர்களுக்கு காஸ் மானியம் 'கட்'”