அதிரையில் பேரிடர் மேலாண்மை திட்ட முதலுதவி பயிற்சி ஆட்சியர் துவக்கி வைத்தார்

Posted December 15, 2016 by Adiraivanavil in Labels:
 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தில்  சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கிராம பேரிடர் மேலாண்மைத் அணிகளின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்ச்சி நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் வரவேற்புரை மற்றும் திட்ட விளக்கம் குறித்து சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி செயல்முறை விளக்கினார். இதனையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாச்சியர் கோவிந்தராசு அவர்கள் பேரிடரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அவற்றை எதிர் கொள்ளும் முறைகளை பற்றி விளக்கினார்கள். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் தலைமையுரையாற்றும் பேசும்போது இத்திட்டத்தில் மக்களின் பங்கேற்ப்பு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி விளக்கினார்கள் மேலும் எந்த நேரத்திலும் நாம் பேரிடரை எதிர் கொள்ளக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்த இரண்டு நாள் பயிற்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை முழுமையாக பெற்று எதிர் வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர்களின் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து தியணைப்புதுறை குழுவினர்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது பற்றிய ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில், செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர். இதில் வெள்ளத்தில் சிக்கியவர்கள், அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், வாழை மரம், சாக்கு மற்றும் மரம், வாட்டர் கேன், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 18 வகையான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர், அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ்   தலைவர் மரைக்கா இத்ரிஸ் அகமது மற்றும் பட்டுக்கோட்டை வட்டர வளர்ச்சி அலுவலர் பிச்சைமுகைதீன் அறிவானந்தம் அவர்கள் நன்றி கூறினார்கள். பேரிடர் மேலாண்மைத் திட்ட பயிற்சியாளர் ஆனந்தகுமார், கிரஸ்சன்ட் பிளட் டேணர்ஸ் மாவட்டதுணைதலைவர் அக்லன்கலிஃபா மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்ட அலுவலர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கிராம பேரிடர் மேலாண்மை அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 




















0 comment(s) to... “அதிரையில் பேரிடர் மேலாண்மை திட்ட முதலுதவி பயிற்சி ஆட்சியர் துவக்கி வைத்தார்”