அதிராம்பட்டினம் அருகே பொது ஆவுடையார் கோவில் கடைச் சோமவார திருவிழா
Posted December 14, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பரக்கலக் காட்டை கிராமத்தில் பொது ஆவுடையார் கோவில் உள்ளன. இக்கோவிலில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையன்று சோமவார திருவிழா நடைப்பெறுவது வழக்கம். அதன்படி நேற்று 12ந் தேதி கடைச்சோமவார திருவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றன. நேற்று பகலில் இருந்து வெளியூர் களில் இருந்து பக்தர்கள் பேருந்து மற்றும் சைக்கிள்களில் வந்தனர். கோவிலில் இரவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றன. இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோமவார நிகழ்ச்சியையொட்டி கோவிலை சுற்றி மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தங்களுடைய நேர்த்திக்கடனான நெல். தென்னம்பிள்ளைகள், தானியங்கள் இவைகளை செலுத்தினர். இவைகளை கோவிலில் கோவில் வளாகத்தில் ஏலம் விடப்பபட்டன. கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தப்பட்டன. இக்கோவிலின் வளாகத்தில் கச்சேரி நடைப்பெற்றன. கோவிலில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக தீயனைப்பு வாகம் நிறுத்தி வைத்துள்ளனர். இக்கோவிலின் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டிகள் எஸ்.சடகோபராமானுஜம், எஸ்.ஆர்.ராமானுஜம், செயல் அலுவலர் சரவணன் மற்றும் பரக்கலக்கோட்டை கிராம வாசிகள் செய்திருந்தனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே பொது ஆவுடையார் கோவில் கடைச் சோமவார திருவிழா ”