அதிராம்பட்டினம்,டிச.1
தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் மையம் கொண்டுள்ள புயல் நாளை டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நாடா புயல் காரணமாக தஞ்சை கடலோர பகுயியான அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மல்லிப்பட்டினம் சேதுபாவசத்திரம் பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியல் கனமழை பெய்து வருகிறது.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பலத்த கனமழை”