அதிரையில் சோ ராமசாமி; மறைவுக்கு பத்திரிகையாளர் சங்க இரங்கல் கூட்டம்

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சோ ராமசாமி. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இன்று அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் காலமாகியுள்ளார்.

 இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் பத்திரிகையாளர் கூட்டம் தலைவர் செல்வக்குமார் தலமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமி இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இந்த கூட்டத்தில் தலைவர்: செல்வக்குமார்.(தினகரன்) துணைதலைவர்: சிவா (தினமலர்) செயலாளர்: மரைக்கா இத்ரிஸ் அகமது (பிறைமலர்) துணைசெயலாளர்: கண்ணன் (மக்கள்குரல்,வணக்கம்இந்தியா) இணைசெயலாளர்: ரெத்தினம் (தினதந்தி) பொருளாளர்:சூப்பர்அப்துல்ரஹ்மான் (பயமறியான் மக்கள் ரிப்போர்ட்) செயற்குழு உறுப்பினர்கள்:  அக்லன்கலிஃபா (ராயல் டிவி)  சாகுல்ஹமிது (அதிரை எக்ஸ்பிரஸ்) மாதஇதழ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 








0 comment(s) to... “அதிரையில் சோ ராமசாமி; மறைவுக்கு பத்திரிகையாளர் சங்க இரங்கல் கூட்டம் ”