அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலி
Posted December 01, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், டிச. 1
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பழவேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைரப்ப தவமணி (46) இவர் (எலெக்ட்ரீசியன்) மின் வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார் இதனையடுத்து நேற்று தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராமல் மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலி”