அதிராம்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு
Posted December 14, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் படகு பழுதாகி கடலில் தத்தளித்த 2 மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார்கள் மீட்டு கரைசேர்த்தனர். அதிராம்பட்டினம் அருகில் உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் காலை அதே ஊரைச்சேர்ந்த மோகன்தாஸ் வயது 29,கணேசமூர்த்தி 22 ஆகிய இரு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.இந்நிலையில் கடலில் 7 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு பழுதானது. இதையடுத்து நீண்ட முயற்சிக்குப்பின்னரும் படகு இயங்காததையடுத்து கடலோர பாதுகாப்புக்குழும அவசர தொலைபேசி எண் 1093 க்கு தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தனர்.இதையடுத்து பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் சப் இன்பெக்டர் ஞானசேகரன்,படகு சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன் உள்ளிட்ட போலீஸார் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும 5 டன் ரோந்துப்படகில் சென்று கடலில் தத்தளித்த மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டு பாதுகாப்பாக கரைசேர்த்தனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு”