அதிரையில் ஜெயலலிதா மறைவு செய்தி கேட்ட மேலும் ஓர் மூதாட்டி சாவு

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகில் உள்ள கொள்ளுக்காடு  காரியாபுரம்  கிராமத்தை சேர்ந்த கருப்பையன் என்கிற விவாசயி மனைவி பார்வதி வயது(55) நேற்று முன்தினம் இறந்தார் ஜெயலலிதா இறப்பு செய்தியை டிவி-ல் பார்தபோது அதிர்ச்சியில் மயங்கி விழந்து இறந்தார். இந்நிலையில் அதிராம்பட்டினம் அருகில் உள்ள பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த அடைக்கலம்.விவாசயி கூலி. இவரது மனைவி நாடியம்மாள் வயது(60) இவர் தன் கணவருடன் நடுவிக்காடு கிராமத்தில் உள்ள தனது மகள் முனீஸ்வரி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் தூங்கி எழந்தவுடன் டிவியை பார்த்திருக்கிறார்.அப்போது டிவியில் ஜெயலலிதா இறந்த செய்திவந்ததை கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழந்து இறந்தார். அதிராம்பட்டினம் பகுதியில் ஜெயலலிதா மறைந்த செய்தியை கேட்டு அடுத்தடுத்து இரண்டு பெண்கள் இறந்த சம்பவம் இப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



0 comment(s) to... “அதிரையில் ஜெயலலிதா மறைவு செய்தி கேட்ட மேலும் ஓர் மூதாட்டி சாவு”