அதிரையில் அகில இந்திய அளவில் முதன் முறையாக பள்ளியில் எப்எம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

Posted December 18, 2016 by Adiraivanavil in Labels:
 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எம்எம் ரேடியோ நிலையத்தை  நேற்று மாலை  மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை திறந்துவைத்தார்.

அதிரை எப்எம் 90.4 என்ற பெயரில் கடந்த 2011 வது வருடம் வானொலி அமைக்க விண்ணப்பிக்கப்பட்டு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட 6 அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று தற்போது அதற்கான டவர் அமைக்கப்பட்டு பணி நிறைவடைந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை எப்எம் நிலையத்தை திறந்து வைத்தார். 

 இதில் நமது சமூகம் நமது நலன் என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் தினமும் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டுக்கோட்டை ,மதுக்கூர்,  முத்துப்பேட்டை,அதிராம்பட்டினம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 2.50 லட்சம் மக்கள் இந்த சமூக பண்பலை வானொலி அதிரை எப்எம் 90.4 மூலம் பயன்பெருவர். 

 இதன் துவக்க விழா அதிரை எப்எம் நிர்வாகத் தலைவர் தாஜீதீன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாத்துரை துவக்கிவைத்து பேசுகையில் 

கல்வி பொருளாமாரம் மருத்துவம் வேலைவாய்ப்பு விவசாயம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனுள்ள கருத்துக்கள் இந்த சமூக பண்பலை மூலம் வெளியிடப்படும் இந்த கருத்துக்களை பொதுமக்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் சமூக பயன்பெறும் வகையில் உள்ள இந்த எப்எம் இந்தப் பகுதியிளைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை இப்பகுதி மக்களுக்கு தந்த எப்எம் நிர்வாகத்தலைவர் தாஜிதின் மற்றும் நிர்வாகிகளையும் பாரட்டுகிறேன் என்று பேசினார்.

 இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர்  செய்யது அகமது கபீர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர் செய்தனர்.

















0 comment(s) to... “அதிரையில் அகில இந்திய அளவில் முதன் முறையாக பள்ளியில் எப்எம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்”