அதிரையில் 5 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் மீது தாக்குதல்- போலீஸ் வலை வீச்சு
Posted December 09, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று நள்ளிரவு வீடுகளில் நிறுத்திவைத்திருந்த 5 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்களை மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தால் அதிராம்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கீழத்தெரு, புதுத்தெரு,மேலத்தெரு மற்றும் கடற்கரைத்தெரு ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் புகுந்து ஆயுதங்களால் அங்கு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிஓடிவிட்டனர்.
இதில் கீழத்தெருவைச் சேர்ந்த அகமது ஜலாலுதீன் மகன் முகமது புகாரி புதுத்தெருவை சேர்ந்த அன்சர்கான் கீழத்தெருவை சேர்ந்த முகமதுஉமர் மகன் அஜ்மல் மேலத்தெருவை சேர்ந்த ரியாஸ் கடற்கரை தெருவை சேர்ந்த அன்வர் மகன் பஷிர்அகமது ஆகியோரின் கார்கள் மர்ம நபர்கள் தாக்கியதால் கார்கள் பலத்த சேதம் அடைந்தது. மேலும் கீழத்தெருவை சேர்ந்த சையதுபுஹாரி மகன் அஜ்மல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹதர்அலி மகன் மைதீன்அகமது ஆகிய இருவர்களுடைய ஆட்டோக்கல் மர்ம நபர்ளால் தாக்கப்பட்டு சேதம் அடைந்தது.
இது பற்றி முகமதுபுஹாரி மற்றும் அன்சர்கான் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப் இன்ஸ்பெக்டர் திலக் ஆகியோர் ;எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்த 7 வாகனங்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கபட்ட சம்பவம் அதிராம்பட்டினம் மட்டும் இல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comment(s) to... “அதிரையில் 5 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் மீது தாக்குதல்- போலீஸ் வலை வீச்சு”