அதிராம்பட்டினத்தில் கடல் நீர் பெருக்கு-துறைமுக சாலை சேதம்

Posted December 05, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்;  கடல் நீர் பெருக்கெடுத்ததால் துரைமுகச் சாலை தேதமடைந்தது. அதிராம்பட்டினம் கடற்பகுதியான ஏரிப்புறக்கரை மீன்பிடி துறைமுகம் மற்றும் கடலோர புறக்காவல் நிலையம்  செல்லும் தார் சாலையில் நேற்று முன்தினம் இரவு கடல் நீர் பெருக்கெடுத்து அதிக வேகத்தில் துறைமுக வாய்கால் வழியாக வந்ததால் தார் சாலையில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை பழுதடைந்தது. இதனால் அந்த வழியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் துறைமுக வாய்க்காலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் நீரின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்றும் மோதிக்கொண்டது.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியிருந்த நிலையில் அடுத்த நாளே கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலில் நீர் நிரம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் வந்தது .இந்நிலையில் நேரம் செல்லச்செல்ல  படிப்படியாக நீரின் அளவு குறைந்து பழைய நிலையைஅடைந்தது.இருந்தும்  இரண்டு சக்கர வாகனங்கள் தவிர்த்து நான்கு சக்கர வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படும் என்பதால்  நான்கு சக்கரவாகனங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.



0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கடல் நீர் பெருக்கு-துறைமுக சாலை சேதம்”