அதிரையில் சபரி ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்(அதிக படங்கள்)

Posted December 09, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்  ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை ஆலடிகுளம் எதிரே அமைந்துள்ளது. ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் மலையில் அமைந்தது போல் ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் போல் தோற்றத்துடன் அமைக்கப்பெற்று இருப்பதால் எங்கும் காணாத தனி சிறப்பாகும.; இந்த சாரி ஐயப்பன் கோவிலில் கடந்த (6-12-2016) செவ்வாய் கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியர்கள் முன்னிலையில், கோபுரம், மூலவர் ஸ்ரீ சபரி ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சம காலத்தில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி மற்றும் சுற்றிவுள்ள  கிராமங்களிலிருந்து  திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னாதானம் நடைபெற்றது. இந்த ஏற்பாட்டினை டிரஸ் உறுப்பினர்கள் ஆயுள் கால உறுப்பினர்கள் உபயதாரர்கள் மற்றும் அனைத்து குருசாமிகள் ஐயப்பன் பக்தர்கள் செய்தனர் 














































0 comment(s) to... “அதிரையில் சபரி ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்(அதிக படங்கள்) ”