அதிரையில் நாளை ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் மாக கும்பாபிஷேகம்!
Posted December 08, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிபேட்டை அருகில் உள்ள ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் கடந்த (6-12-2016) செவ்வாய் கிழமை முதல் இன்று (8-12-2016) வியாழன் கிழமை வரை யாகசால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (8-12-2016) வியாழன் கிழமை R.ஆறுமுகதேவர்-திருமதிபக்கிரியம்மாள் குடும்பத்தினர்கள். ஸ்ரீ காமாட்சியம்மன் வெல்டிங் ஒர்க்ஸ் கரையூர் தெரு அதிராம்பட்டினம் அவர்கள் சார்பில் இரண்டாவது கால யாகசால பூஜைகள் நடைபெற்றது
இதனையடுத்து நாளை காலை 9-30 மணிக்குமேல் 10-30- மணிக்குள் மூலவர் ஸ்ரீ சபரிஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சம காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது
0 comment(s) to... “அதிரையில் நாளை ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் மாக கும்பாபிஷேகம்!”