அதிரையில் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் அதிரை FM 90.4

Posted December 16, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம், டிச-16
அதிராம்பட்டினத்தில் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் அதவது  கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உட்பட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் வாகையான  நிகழ்ச்சிகள், தினமும் 6 மணி நேரம் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை  தஞ்சை  மாவட்ட பகுதியான அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்புற 40 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், வரையிலான 10 ஏர் மைல் தூரத்தில் சமூக பண்பலை வானொலி - அதிரை FM 90.4; எடுக்கும்.

 இதனையடுத்து அதிராம்பட்டினத்தில்  இமாம் ஷாபி பள்ளியில் இன்று மாலை 3 மணி அளவில்  மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ காண்பரன்சிங் மூலமாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கிரண் பேடியிடம் மாணவர்களின் கேள்விக்கு அவர் ஒவ்வொன்றாக விளக்கம் அளித்தார்.

. இதனையடுத்து 5மணியளவில் அதிரை FM 90.4; அலுவலகத்தில் அதிராம்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிருபர்களும், பேட்டி அளித்தபோது நாளை மறு நாள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சமூக பண்பலை வானொலி விழாவில் அதிரை FM 90.4 நிர்வாகத் தலைவர் ஹாஜி. எம்.எஸ் தாஜுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள அதிரை FM 90.4 துவக்க விழா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞசை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு பண்பலை வானொலி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.

. அதிரை பண்பலை வானொலி FM 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழு சார்பில் சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிரைFM 90.4 நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. எம்.கே செந்தில் குமார், நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் உட்பட கல்வியாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். 

அதிரை FM 90.4 பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நிர்வாகம் சார்பில் கிராமப் பகுதி மக்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், அங்கன் வாடிகள், தேனீர் விடுதிகள், சாலையோர வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், சலூன் கடைகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சுமார் ஆயிரம் மேற்பட்ட  பயனாளிகளுக்கு விலையில்லா வானொலிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றனர். 






0 comment(s) to... “அதிரையில் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் அதிரை FM 90.4 ”