அதிராம்பட்டினத்தில் 500 ரூபாய் நோட்டு எங்கே? பொதுமக்கள் தவிப்பு

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை புழக்கத்திற்கு வராததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுதது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தது. இந்த கால அவகாசம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிந்தது. மேலும் பெட்ரோல் பங்குகளில் பழைய நோட்டுக்களை மாற்றும் அவகாசம் முடிந்தது. இதனால் அதிராம்பட்டினத்தில் உள்ள வங்கிகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.; ஆனால், போதிய அளவு பணம் வங்கி கையிருப்பில் இல்லாததால் கடந்த சில தினங்களாக  பொதுமக்கள் அலைந்து வருகின்றனர். வங்கிகளில் கால் கடுக்க நின்று பணம் எடுத்தால் கூட அவை ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருக்கின்றன. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து கொண்டு பென்சன்தாரர்கள் சில்லறைக்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கதிற்கு வந்த போதிலும் அவை அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களை இன்னும் சேரவில்லை என்று மக்கள் புழம்புகின்றனர்.  


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் 500 ரூபாய் நோட்டு எங்கே? பொதுமக்கள் தவிப்பு ”