அதிராம்பட்டினத்தில் சாகர் ஹவாச் ஆப்ரேசன் ஒத்திகை நிகழ்வு இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் கடற்பகுதியான தம்பிகோட்டையிலிருந்து கட்டுமாவடி வரைக்கும் தஞ்சை எஸ்பி மகேஸ் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி குமரவேல், இன்ஸ்பெக்டர் சுபாஸ்சந்திரபோஸ், மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர்கள் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் இடத்தில் காவல் துறையினர் படகில் சென்று சோதனை செய்தனர். அதை போல் அதிராம்பட்டினம் வெளிவயல் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் ஆகிய துறைமுகம் பகுதியில் தனிக்கை செய்தனர். தஞ்சை கிழக்கு கடற்கரை சாலையான தம்பிக்கோட்டை ராஜாமடம் சேதுபாவாசத்திரம் இரண்டாம்புளிகாடு போன்ற சோதனை சாவடிகளில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கீழத்தோட்டம் போன்ற பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் சோதனை செய்தனர்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை பயிற்சியை ஒட்டி தஞ்சை கடலோர பாதுகாப்பு போலீசார் கடலில் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர்.
அதிராம்பட்டினம், மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீடுகள் மற்றும் கடைகள், சி.எம்.பி.வாய்க்கால் பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பற்றி பொது மக்கள் பல பேர்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் செய்து வந்தனர். புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 9.00 மணிக்கு ஆக்கிரமிப்பு பணி துவங்கியது. முதலில் அதிராம்பட்டினம் பகுதியில் ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கின. ஆனால் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டு தலைமை நில அளவையர் அளந்து அம்புக்குறியீட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு பணியில் பட்டுக்கோட்டை கோட்டாச்சிரியர் இரா.கோவிந்தராசு. தாசில்தார்; ரவிச்சந்திரன். முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் இராஜகுமாரி. பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராசு. நிலசர்வேயர்கள் மாரிமுத்து செல்வகுமார். தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்
100 நாள் வேலைத் திட் டத் தில் சம் ப ளம் வழங் கா ததை கண் டித்து பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் மற் றும் வங் கியை தொழி லா ளர் கள் முற் று கை யிட்டு உள் ளி ருப்பு போராட் டம் நடத் தி னர்.
தஞ்சை மாவட் டம், பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட கரம் ப யம் ஊராட் சி யில் 100நாள் வேலைத் திட்ட தொழி லா ளர் க ளுக்கு கடந்த சில மாதங் க ளாக சம் ப ளம் வழங் கப் ப ட வில்லை. இதை கண் டித்து நேற்று சுமார் 75 பெண் கள் உள் பட 100க்கும் மேற் பட் டோர் பட் டுக் கோட்டை ஊராட்சி ஒன் றிய அலு வ ல கத்தை முற் று கை யிட்டு, வட் டார வளர்ச்சி அலு வ லர் (கிராம ஊராட் சி கள்) அறை முன்பு அமர்ந்து உள் ளி ருப்பு போராட் டம் நடத் தி னர். தொடர்ந்து பெரி ய தெ ரு வில் உள்ள ஒரு தேசிய மய மாக் கப் பட்ட வங் கி யை யும் முற் று கை யிட்டு, கிளை மேலா ளர் அறை முன்பு அமர்ந்து போராட் டத் தில் ஈடு பட் ட னர். இத னால் ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் மற் றும் வங் கி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
போராட் டத் திற்கு மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட்சி பட் டுக் கோட்டை ஒன் றிய செய லா ளர் செல் வம் தலைமை வகித் தார். இந் திய கம் யூ னிஸ்ட் கட்சி ஒன் றிய செய லா ளர் மார்க்ஸ், விவ சாய தொழி லா ளர் சங்க ஒன் றிய தலை வர் பெஞ் ச மின், விவ சாய சங்க ஒன் றிய செய லா ளர் கலி ய பெ ரு மாள் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். போராட் டத் தில் அகில இந் திய விவ சாய தொழி லா ளர் சங்க மாநில செய லா ளர் கே.பக் கி ரி சாமி வட் டார வளர்ச்சி அலு வ லர் அறி வா னந் தம், வங்கி கிளை மேலா ளர் ஆகி யோ ரு டன் பேச் சு வார்த்தை நடத் தி னார். அப் போது, தொழி லா ளர் க ளு டைய கோரிக் கை கள் நிறை வேற் றப் ப டும் என உறு தி ய ளித் ததை தொடர்ந்து போராட் டம் கைவி டப் பட் டது.
அதிரை அருகே மனோராவில் துர்நற்றம் வீசும் கழிவறை-சுற்றுலா பயணிகள் அவதி
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கி .பி 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஆங்கில அரசுக்கு ஜால்ரா மன்னராக இருந்த இவர் ஆங்கிலேயர்களுக்கும் நெப்போலியனுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார் . 75 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்த உப்பரிகை போல் அமைந்த கோட்டைக்கு சரபோஜி மன்னர் ராணியுடன் சில சமயங்கள் வந்து போனதாக தகவல்கள் உண்டு. துப்பாக்கிகள்,மற்றும் ஏனைய ஆயுதங்கள் வைத்துகொள்ளும் இடமும் இங்கே உண்டு. இந்தநிலையில் பள்ளி விடுமுறையின் போது உள்ளுர் மற்றும் வெளியூர் உள்ள மாணவ மாணவிகள், பெறியவர்கள் சிறுவர்கள் என பொழுதை குதுகலத்துடன் கழிப்பதற்காக இங்கு தினமும் வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 500 முதல்1000 பேர் வரை வருவதாக கூறுகின்றனர். அதுவும் வார கடைசி நாட்களில் சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை கூடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். நாம் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மனோராவும்; பூங்காவை சுற்றுலா பயணிகள் அங்கு வருகின்றனர் இதனையடுத்து சிறுவர் சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு,; ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். ;மனோராவில்; உள்ள கடலில் சுற்றிப் பார்ப்பதற்கென்றே படகு சவாரி செயல்படாமல் முடங்கி காணப்படுவதுதால் சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்தது.
இப்படி இருக்கும் சுற்றுலா தளத்திற்க்கு வருகைதரும் பயணிகளுக்கு;; மனோரா ஏதிரில் இலவச பொது கழிவறை அமைக்கப்பட்டுள்ளது இதில் ஆண்கள் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிற்கும் கழிவறையில் தண்ணீர் வசதியில்லாமல் மிகவும் சுகாதாரமற்று காணப்பட்டன. கழிவறையின் உள்ளே சென்றுவிட்டு திரும்பிய பயணிகளில் பெரும்பாலானோர் வாந்தியுடன் வெளியே வருவதை காணமுடிந்தது. நிர்வாகத்தினர் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும் .
இது பற்றி பட்டுக்கோட்டை சரவணன் கூறுகையில்
சுற்றுலா தளமான மனோராவிற்க்கு என் குடும்பத்துடன் வந்துவுள்ளேன் மனோராவில் உள்ளே சென்று பார்ப்பதற்க்கு உள்ளே கதவு பூட்டியே கிடக்குது என்னை போல் வெளியூரில் வந்துவுள்ள சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இது மட்டுமில்லாமல் மனோரா எதிரே இருக்கும் கழிவறையும் மிகவும் தண்ணீர் வசதியில்லாமல் துர்நாற்றம் வீசிவருகிறது இதை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுனார்
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப் படுகிறது. இந்த ஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால்…

ராத்திரி லேட்டா சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய

திருவாரூர் அருகே அரிதான வெள்ளை நிற நாகம் பிடிபட்டது.வெள்ளை நிற நாகம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லாவூதீன். நேற்று இவருடைய வீட்டுக்குள் 8 அடி நீளம் கொண்ட அரிதான வெள்ளை நிற நாகம் புகுந்தது. இந்த நாகத்தை உயிருடன் பிடிக்க ஜெய்லாவுதீன் முடிவு செய்தார். எனவே நாகத்தை பிடிக்க சிவனடியார் மோகன் (வயது54) என்பவருக்கு தகவல் தரப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மோகன், எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் லாவகமாக வெள்ளைநிற நாகத்தை பிடித்தார்.
இதுகுறித்து மோகன் கூறியதாவது:–
நான் சிவனடியார். கடந்த 30 ஆண்டுகளாக நாகங்களை பிடித்து வருகிறேன். வீடு, மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள நாகங்களை மட்டுமே பிடித்து வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதியில் விட்டு விடுவேன். இதுவரை 9,600 நாகங்களை பிடித்துள்ளேன். இதில் 9 நாகங்கள் என்னை கடித்துள்ளன.
தற்போது பிடிப்பட்ட 8 அடி நீளம் கொண்ட நாகம், வெள்ளை நாகம் இனத்தை சேர்ந்தது. இது கொடிய விஷத்தன்மை கொண்டது. இந்த இனத்தை சேர்ந்த நாகம் இந்தியாவிலேயே மிகவும் அரிதானது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிராம்பட்டினம் அருகே துறைமுகம் அமைக்க இடம் தந்தவர்களுக்கு இழப்பீடு வழங்ககோரி மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தாஜூதீன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காசிநாதன், மருதமுத்து, அகமதுசாபிக், இப்ராகிம், முகமதுராபிக், ராஜ்குமார், பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்காக அரசின் உத்தரவின்படி மீனவர்கள் இடத்தை காலி செய்து கொடுத்திருக்கிறோம். அந்த இடத்தை அலுவலர்கள் சரியாக கணக்கீடு செய்யவில்லை. துறைமுகம் அமைக்க இடம் தந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை கூட இதுவரை வழங்கவில்லை. இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். துறைமுகம் அமைப்பதற்காக இடங்களை காலி செய்து கொடுத்து ஒரு ஆண்டு ஆகி விட்டது. இதுவரை துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை செல்லும் மல்லிப்பட்டினத்தில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்குவதற்கு பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, கோரிக்கைகள் நிறைவேறாத கட்டத்தில் வருகிற 10–ந் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மீனவர்களின் படகுகள் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
அன்றைய பெண்கள், நாள்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம்
அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து
கொடுக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இளம்தேங்காயி லிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பத ன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப் பட்டது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம்,
1. மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும்.
2. முடியின் நுனிப்கதியில் பிளவு தோன்றாது.
3. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது.
4. கூந்தலின் ஆரோக்கியத்தை இயற்கையாகவே தூண்டும்
5. கூந்தலின் மினுமினுப்பு தன்மையைக் கூட்டும்

எந்த பிரச்சனைகளும்இல்லாத கூந்தல், இயற்கையா கவே ஆரோக்கியமாக வளரும்தானே கூந்தல் என்பது 1 வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு உடைந்து உதிர்ந்துகொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெ யோ , ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்த லும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
.
=> அகிலாண்டேஸ்வரி
.
=> அகிலாண்டேஸ்வரி
கதற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்லன் நடிகர்! – பரபரப்பு
நடிகை கதற கதற அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற வில்லன் நடிகரால் படப்பிடிப்பு தளத்தில்
பரபரப்பு ஏற்பட்டது. தான் கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து ச் சென்ற போது, நடிகை கீர்த்தி சுரேஷ் கதறி அழுதார் ‘தொடரி’ படத்தில்வரும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது என்று வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தொடரி.


கீர்த்தி சுரேஷ் அருமையான நடிகை. ஒரு காட்சியில் நான் அவரின் முடியை பிடித்து தர தரவென
இழுத்து செல்லவேண்டும். இக்காட்சியை இயக்குனர் என்னிடம் விளக்கியதும், நான் கீர்த்தி யிடம் சென்று காட்சியை கூறி உங்களுக்கு வலிக்கும் என்றேன். அவரோ பரவாயில்லை நடிக்கலாம் என் றார். நான் தலைமுடியை பிடித்து இழுக்கும்போது வலியால் கதறினார். வேண்டாம் என்றேன். பரவாயி ல்லை காட்சி நல்லா வந்தால் சரி, எனக்கு வலிக்கிற தே என லேசாக இழுக்காதீங்க, என்னைப்பற்றி கவலைப்படாம நல்லா பிடித்து இழுங்க என்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கதறகதற ஒரு பெண்ணை அவளது தலை முடி யை பிடித்து இழுத்துச் செல்லும் இந்த காட்சி யை உண்மை என்று நினைத்த அந்த கிராம மக்கள் ஒன்று கூடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இது படப்பிடி ப்பு என தெரியவந்ததும் பலர் கலைந்து சென்றாலும், சிலர் மட்டும் நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்
முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
முருங்கைக்காய் நறுக்கி போட்டு சாம்பார் வைத்து கொதிக்க கொதிக்க அதனை பதமாக வெந்த சோற்றில்
கடுமையான மலச்சிக்கலா?, வயிற்றுப்புண் ஏற்ட்டிருகிறதா, கண்நோயா
ல் பாதிப்பா? நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் என்ன தெரியுமா? முருங்கைக்காய் சாம்பாரை கொதிக்க கொதிக்
க, சோற்றில் ஊற்றி நன்றாக பிசைந்து இளஞ்சூட்டில் சாப்பிட்டு வந்தால் மேற் சொன்ன நோய்களுக்கு நல்மருந்தாக இருந்து நோய்களை விரட்டி அடிக்கும். மேலும் இதனை அடிக்கடி வைத்து சாப்பிட்டவேண்டும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

குறிப்பு:
வெறும்சாம்பார் சோறுமட்டும் சாப்பிடாமல் சாம்பாரில் இருக்கும் முருங்கைக்காயில் சதைப்பகுதியையும், அதன் விதைகளையு ம் வீணாக்காமல் சாப்பிட வேண்டும்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். கார் டிரைவர்.
இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகிறது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. விஜய் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்தோணியம்மாள் பக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த விஜய் அங்கு சென்ற மனைவியிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.
பின்னர் அங்கிருந்த மண்எண்ணையை மனைவி உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அந்தோணியம்மாளை மீட்டனர். பின்னர் அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விஜயை கைது செய்தனர்.
news by maalaimalar
அதிராம்பட்டினம்;, செப்.22:
பேராவூரணியிலிருந்து சம்பைப்பட்டிணம் செல்லக்கூடிய சாலை சீர மைக்கப்பட வேண்டு மெனமார்க் சிஸ்ட்கம் யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி விடுத்துள்ள அறிக்கை:
பேராவூரணியிலிருந்து பூக்கொல்லை, முடச்சிக்காடு கலைஞர் நகர், சமத்துவபுரம், ஊமத்தநாடு, குப்பத்தேவன் வலசை, ஆலடிக்காடு வழியாக சம்பைப்பட்டிணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இணையக்கூடிய இணைப்பு சாலை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இச்சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது தார் சாலை மறைந்து மண்சாலையாக மாறி,குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பேருந்துகளுக்கு பின்னால் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்ய முடியாத அவல நிலை உள்ளது. இந்த சாலை வழியாக தனியார் பள்ளிப் பேருந்துகள், நகரப் பேருந்துகள் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சாலை பராமரிப்பின்றி உள்ளதால் அரசு பேருந்துகள் பல நேரங்களில் இவ்வழியாக வருவதில்லை. இதனால் பள்ளி செல் லும் மாணவர்களும், பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டித்து பேராவூரணியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் நலனை காக்க தமிழக அரசை வலியுறுத்துவது. கர்நாடகத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்து வது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் நீலகண்டன், வெங்க டேசன் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை, செப். 22:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் முறையாக பயன்படுத்தாமல் பலலட்ச ரூபாய் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் தொட்டிகள், வண்டிகள் வீணாகிவிட்டன.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த 5 ஆண்டில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூட முன்னுரிமை கொடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பேரூராட்சி அலுவலகத்தையே அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத நிலை உளளது.
உதாரண மாக சமீபத்தில் 18 வார்டுகளிலும் குப்பை சேகரிக்க பல லட்சம் மதிப்புள்ள வண்டிகள் வாங்கப்பட்டது. இவை பயன் படுத்தப் படாமல் அலுவலகத்தின் பின் புறம் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த வண்டிகள் ஒவ்வொன்றாக வீணாகி வருகின்றன. அதே போல் வார்டுகளுக்கு வாங்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் பயன்படுத்தப் படாமல் பேரூராட்சி அலுவலகத்தில் ஆங் காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. பேரூராட்சி அலுவலக பின்புறம் பழுதடைந்த நிலையில் பயன் பாட்டில் இல்லாத கழிப்பறை ஒன்று உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த கழிப்பறையை பேரூராட்சி நிவாகம் சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை அடுக்கி வைக்க பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி முன்புறம் மின் சாதன பொருட்கள் வைக்கும் சிறிய கட்டிடம் உள்ளது. அதுவும்ம் பராமரிக்கப்படாமல் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வருகிறது. அதன் மின்சார இணைப்பு மெயின் போர்டுகள் சிறுவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
அதே போல் பல லட்சத்தில் உயர் கோபுரவிளக்குகளை சரி செய்ய வாங்கப் பட்ட அலுமினிய ஏணி ஓரத்தில் வீணாகி வருகிறது. குப்பைகள் சேகரிக்கும் மினி டிராக்டர் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் சிறு பழுதாகி நிறுத்தப்பட்டது. முறையாக பராமரிக்காததால் அது வீணாகி எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. அதே போல் அலுவலகவளாகத்தில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியை ஏற்படுத்திவருகிறது'
இது குறித்து சமூக ஆர்வலர் முகமது மாலிக் கூறுகையில்,
தமிழ் நாட்டில் ஒரு மோ மான பேரூராட்சி நிர்வாகம் என்றால் அது இந்த பேரூராட்சி நிர்வாகம்தான். இதை இது வரை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாதது வேதனையான ஒரு விஷயம். 5 ஆண்டுகளில் பெயர் சொல்லும் அளவில் எந்த ஒரு மக்கள் பணியும் செய்யவில்லை.ஆனால் நிதி மட்டும் விரயம் செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி வளாகம் முழுவதும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகி அலுவலகம் அலங்கோல மாக உள்ளது என்றார்.
news தினகரன்
தினமும் இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் . . .
தயிர்-இல் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும்
வைட்டமின்B12 ஆகிய ஊட்டச்சத்துகள் அதிகம்நிறைந்து காணப்படுகிற
து. பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துக்கள் இந்த தயிரில் இருந்து கிடைக்கிறது. ஆகையால் தாராள மாக இந்த தயிரை பகல்பொழுதில்நாம் பாதகமில் லாமல் உட்கொண்டால் நன்மையேபயக்கும். ஆனா ல் இரவில்தொடர்ந்து தயிர் சாப்பிடக்கூடாது. மீறி தயிரை தினமும் இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எந்த மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை
இங்கு காணலாம்

தினமும் இரவில்தொடர்ந்து தயிர் சாப்பிட்டால், சாப்பிடுப வர்களுக்கு ரத்தசோகை, காமாலை, தோல்நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் உண்டாகி
ஆரோ க்கிய கேடு ஏற்படும். ஒருவேளை தயிரை இரவில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தால் இதனுடன் சிறிதளவு தேன் அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட லாம். என்கிறது. சித்த மற்றும் இயற்கை மருத்துவம்..

அதிராம்பட்டினத்தை அடுத்து குருவிக்கரம்பையில் 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கும் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்தை உடனே திறந்து மருத்துவரையும் நியமிக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அழகியநாயகிபுரம், குருவிக்கரம்பை, பெருமகளூர், ஊமத்தநாடு ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதில் குரு விக்கரம் பையில் செயல் பட்டு வரும் சுகாதார நிலையத்திற்கு கஞ்சங்காடு, குறவன் கொல்லை, சாந்தாம் பேட்டை, நாடியம், மருங்கப்பள்ளம், முனுமாக்காடு, குண்டாமரைக்காடு, கள்ளங்காடு, கங்காதரபுரம், பாலச்சேரிக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் 500 பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த சுகாதார நிலையத்தில் பொது மருத்துவ பிரிவும், சித்த மருத்துவ பிரிவும் ஒரே கட்டிடத்தில் இயங்கிவந்தது. இரண்டு பிரிவுகளிலும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் குருவிக்கரம்பை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் அருகிலேயே சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் சித்தமருத்துவப்பிரிவிற்கு கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி முடிப்பதற்குள்ளாகவே சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் பணியிட மாறுதலில் சென்று விட்டார். இதனால் சித்த மருத்துவப்பிரிவுக் கென கட்டப் பட்ட கட்டிடம் 4 ஆண்டுகளாக திறக்கப் படாமல் புதர்மண்டிக்கிடக்கிறது. மருத்துவரும் இது நாள் வரை நியமிக்கப்படவில்லை. இம் மருத்துவகட்டிடத்தை திறக்க வேண்டும், புதிதாக சித்த மருத்துவர் நியமிக்கப்பட வேண்டு மென குருவிக்கரம்பை ஊராட்சி சார்பிலும், சுற்றுவட்டார பொது மக்கள் சார்பிலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா போன்ற பல வித நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த சித்த மருத்துவ கட்டிடத்தை திறந்து மருத்துவரை நியமிக்க வேண்டு மெனபொது மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதிரை அடுத்து உள்ள குருவிக்கரம்பை அரசு ஆரம்பசுகாதார நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் புதர் மண்டிகிடக்கும் சித்தமருத்துவ பிரிவு கட்டிடம். உள்படம்: குருவிக்கரம்பை ஆரம்பசுகாதார நிலையம்.
பட்டுக்கோட்டை, செப்.20:
பட்டுக்கோட்டை பஸ்நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசு வதாகவும், பஸ் நிலையத்தில் முழுமையாக சுகாதார பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற் கொள்ளவேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தினமும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்த படி செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில அரை மணி நேரம் மழை பெய் தாலே மழை நீர் தேங்கி நிற்கும். பஸ் ஸ்டாண்டில் உள்ள சாக் கடை வாய்க்காலும், பஸ் ஸ்டாண்டின் தரைதளமும் ஒரே மட்டத்தில் இருப்பதாலும், தெரு வோரங்களில் உள்ள சாக் கடை நீர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கலந்து விடுவதாலும் கொசுக்கள் பரவி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் உடனடியாக போர்க் கால அடிப்படையில் பஸ் ஸ்டாண்டை தூய்மைப்படுத்துவதற்கும், பஸ் ஸ்டாண்டில் மேலும் கூடுதலாக கட்டப்பட்டு வருகிற இலவச சிறுநீர் கழிப்பிடங்களை கட்டி முடித்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள சிறுநீர் கழிப்பிடங்களை தவிர பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்த வெளியில் பொது மக்கள் சிறு நீர் கழிக்காதவாறு தினசரி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்குள் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள கழிவு நீர் வாய்க்காலை ஆழப்படுத்தி, கழிவு நீர் தேங்காத வாறு சீரமைக்க வேண்டும். இது குறித்து தமிழ் நாடு தெய்வீக தமிழ்ப் புரட்சி பாசறை நிறுவனர் ஆதிமதன கோபால் கூறுகையில், பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் முழுமை யான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் முழுமையான சுகாதாரப் பணிகளை இது வரை மேற்கொள்ளவில்லை. கழிவு நீர் செல்வதற்கு வழியில்லாமல் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள வடிகாலுக்கு வெளியே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பரவி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் சிறு நீர் கழிப்பிடம் போதிய அளவு இல்லாததால் பஸ் நிலையத்தினுள் திறந்த வெளியில் சிறு நீர் கழிக்கக்கூடிய அவல நிலை உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டில் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் வர உள்ளதால் நகராட்சி அதிகாரிகள் போர்க் கால அடிப்படையில் பஸ் ஸ்டாண்டில் முழு மையான சுகாதாரப்பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்றார்.



Subscribe to:
Posts (Atom)