நமது பட்டுக்கோட்டை மண்ணைச் சேர்ந்தவரும் அதிராம்பட்டினம் தினமலர் நாளிதழ் நிருபர் மற்றும் ரஞ்சி மெடிக்கல் உரிமையாளருமான திரு.இல.சிவா அவர்கள் நடிப்பில் வெளியாகும் தலையாட்டி பொம்மை திரைப்படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. அனைவரும் திரைக்குச்சென்று காணத்தவறாதீர்கள். இந்த திரைபடம் வெற்றி பெற அதிரைவானவில் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்

தினத்தந்தி நாளிதழில் வந்தது
அதிராம்பட்டினம், டிச.26
தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் வண்டிப்பேட்டை அருகில் பிரசித்தி பெற்ற சபரிஐயப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சபரிமலை போன்ற ஐயப்ப சாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள்; கன்னி பூஜை, பெரிய பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்
. அதன்படி, இந்த சபரிஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கி, ஐயப்ப பக்தர்களின் கூட்டு கன்னி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன.
இந்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
இதையொட்டி, ஐயப்ப சாமிக்கு மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கன்னி பூஜை, சக்தி அழைத்தல், கருப்பன் அழைத்தல், படி பூஜை நடந்தது. இதையடுத்து, கோவிலில் திருவிளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயப்பன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கன்னி சாமிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம், டிச.24
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர். இதனையடுத்து பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. இந்த பேரணியில் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, வார்டு கவுன்சிலர்கள், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார் வார்டு பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார் மற்றும் அபுபக்கர் துரைபாஞ்சாலன் ஹாஜாபகுருதின் அப்துல்ரகுமான் அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது
இதனையடுத்து அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இதில் மாணவர்கள் அடுத்தது என்ன படிக்கலாம்?
கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி?
நுழைவுத்தேர்வு என்ன?
என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எம்எம் ரேடியோ நிலையத்தை நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை திறந்துவைத்தார்.
அதிரை எப்எம் 90.4 என்ற பெயரில் கடந்த 2011 வது வருடம் வானொலி அமைக்க விண்ணப்பிக்கப்பட்டு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட 6 அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று தற்போது அதற்கான டவர் அமைக்கப்பட்டு பணி நிறைவடைந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை எப்எம் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் நமது சமூகம் நமது நலன் என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் தினமும் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டுக்கோட்டை ,மதுக்கூர், முத்துப்பேட்டை,அதிராம்பட்டினம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 2.50 லட்சம் மக்கள் இந்த சமூக பண்பலை வானொலி அதிரை எப்எம் 90.4 மூலம் பயன்பெருவர்.
இதன் துவக்க விழா அதிரை எப்எம் நிர்வாகத் தலைவர் தாஜீதீன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாத்துரை துவக்கிவைத்து பேசுகையில்
கல்வி பொருளாமாரம் மருத்துவம் வேலைவாய்ப்பு விவசாயம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனுள்ள கருத்துக்கள் இந்த சமூக பண்பலை மூலம் வெளியிடப்படும் இந்த கருத்துக்களை பொதுமக்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் சமூக பயன்பெறும் வகையில் உள்ள இந்த எப்எம் இந்தப் பகுதியிளைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை இப்பகுதி மக்களுக்கு தந்த எப்எம் நிர்வாகத்தலைவர் தாஜிதின் மற்றும் நிர்வாகிகளையும் பாரட்டுகிறேன் என்று பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர் செய்தனர்.
அதிராம்பட்டினம், டிச-16
அதிராம்பட்டினத்தில் 2.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் அதவது கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உட்பட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் வாகையான நிகழ்ச்சிகள், தினமும் 6 மணி நேரம் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தஞ்சை மாவட்ட பகுதியான அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்புற 40 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், வரையிலான 10 ஏர் மைல் தூரத்தில் சமூக பண்பலை வானொலி - அதிரை FM 90.4; எடுக்கும்.
இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாபி பள்ளியில் இன்று மாலை 3 மணி அளவில் மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ காண்பரன்சிங் மூலமாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு கிரண் பேடியிடம் மாணவர்களின் கேள்விக்கு அவர் ஒவ்வொன்றாக விளக்கம் அளித்தார்.
. இதனையடுத்து 5மணியளவில் அதிரை FM 90.4; அலுவலகத்தில் அதிராம்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிருபர்களும், பேட்டி அளித்தபோது நாளை மறு நாள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சமூக பண்பலை வானொலி விழாவில் அதிரை FM 90.4 நிர்வாகத் தலைவர் ஹாஜி. எம்.எஸ் தாஜுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள அதிரை FM 90.4 துவக்க விழா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞசை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு பண்பலை வானொலி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.
. அதிரை பண்பலை வானொலி FM 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழு சார்பில் சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிரைFM 90.4 நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. எம்.கே செந்தில் குமார், நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் உட்பட கல்வியாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர்.
அதிரை FM 90.4 பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நிர்வாகம் சார்பில் கிராமப் பகுதி மக்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், அங்கன் வாடிகள், தேனீர் விடுதிகள், சாலையோர வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், சலூன் கடைகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சுமார் ஆயிரம் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா வானொலிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து அரிவாள், வெட்டுக்கத்தி, கோடாரி உள்ளிட்ட இரும்பு பொருட்களை, பொதுமக்கள் கண் முன்னே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நன்றாக இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அரிவாள் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பாச்சி அரிவாள் தான். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியில் உள்ள பட்டறைகளில் தயாராகும் அரிவாள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. கிராம கோயில்களில் கிராம தெய்வங்களின் முன்னாள் கம்பீரமாக நிற்கும் அரிவாள்கள் முதல் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுவது வரை சிறப்பிடம் பெற்றவை திருப்பாச்சி அரிவாள்கள். இதற்கு காரணம் மண், தண்ணீர், இரும்பு இவற்றை பக்குவமாக பயன்படுத்தும் திருப்பாச்சி பட்டறை கொல்லு தொழிலாளர்களின் கைத்திறன் என்றால் மறுப்பதற்கில்லை.ஆனால் தற்போது தமிழகத்தில் முகாமிட்டுள்ள, வட மாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விலை மலிவாக கிடைக்கும் இரும்பு பொருட்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வட மாநிலமான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த, கொல்லுப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக இரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறு டென்ட் கொட்டகை அமைத்து தங்கி, தங்களின் இரும்பு தயாரிப்புகளான அரிவாள், வெட்டுக்கத்தி, சுத்தியல், கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர் அரிவாள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். விலை மலிவாக இருப்பதாலும், தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ஆயுதவடிவங்களை போல் அல்லாமல் வித்தியாசமான வடிவத்தில் இருப்பதால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வேண்டிய இரும்பு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் பொதுமக்கள் கண் முன்னே இரும்பு பட்டைகளை உருக்கி, வேண்டிய வடிவத்தில் பொருட்களை உருவாக்கி தருகின்றனர். இவர்கள் தங்கள் தொழிலுக்கான மூலப்பொருளான இரும்பு பட்டைகளை கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதியில் பழைய இரும்பு வியாபாரிகளிடம் பெறுகின்றனர். பெரும்பாலும் லாரிகள், பேருந்துகளில் பயன்படும் ஸ்பிரிங் பட்டைகளையே பயன்படுத்துகின்றனர். வேலைக்கென குடும்ப உறுப்பினர்களே இருப்பதால் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் விலை மலிவாக விற்பனை செய்கின்றனர். மரக்கரி துண்டுகளை ப்ளோயர் (டீடழறநச) எனப்படும் துருத்தி மூலம் ஊதி சூடாக்குகின்றனர். சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இரும்பு பட்டையை சூடாக்கி, வாட்டி அது இளகி நெருப்பு குழம்பு போல் இருக்கையில், சுத்தியலில் அடித்து தட்டி, வேண்டிய வடிவத்தில் இரும்பு உலோகங்களை தயாரிக்கும் லாவகம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதுகுறித்து வடமாநில தொழிலாளர்களிடம் கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இங்கு அதிராம்பட்டினத்தில் பொருட்கள் தயாரித்து விற்று வருகிறோம். நாங்களே தயாரித்து விற்பதால் விலை மலிவாக கொடுக்க முடிகிறது. வியாபாரம் சிறப்பாக உள்ளது. நேர்த்தியான முறையில் தயாரிப்பதால் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வியாபாரம் குறையத் தொடங்கினால் வேறிடத்திற்கு மாறி செல்வோம்' என்றனர்.வட மாநில தொழிலாளர்களின் கைநேர்த்தியான தயாரிப்புகளை விரும்பி, அதனை வாங்கி ஆதரிக்கும் தமிழக மக்களின் இயல்பு தங்களை கவர்ந்திருப்பதாக நெக்குருகி நிற்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தில் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கிராம பேரிடர் மேலாண்மைத் அணிகளின் உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்ச்சி நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் வரவேற்புரை மற்றும் திட்ட விளக்கம் குறித்து சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி செயல்முறை விளக்கினார். இதனையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாச்சியர் கோவிந்தராசு அவர்கள் பேரிடரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அவற்றை எதிர் கொள்ளும் முறைகளை பற்றி விளக்கினார்கள். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் தலைமையுரையாற்றும் பேசும்போது இத்திட்டத்தில் மக்களின் பங்கேற்ப்பு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றி விளக்கினார்கள் மேலும் எந்த நேரத்திலும் நாம் பேரிடரை எதிர் கொள்ளக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்த இரண்டு நாள் பயிற்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை முழுமையாக பெற்று எதிர் வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர்களின் பாதிப்பே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து தியணைப்புதுறை குழுவினர்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது பற்றிய ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில், செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர். இதில் வெள்ளத்தில் சிக்கியவர்கள், அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்தும், நில அதிர்வுகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் முறையான கயிறு வழி மீட்டல், ஏணி வழி மீட்டல், ப்ளாஸ்டிக் பாட்டில்கள், வாழை மரம், சாக்கு மற்றும் மரம், வாட்டர் கேன், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 18 வகையான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பட்டுக்கோட்டை நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர், அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் தலைவர் மரைக்கா இத்ரிஸ் அகமது மற்றும் பட்டுக்கோட்டை வட்டர வளர்ச்சி அலுவலர் பிச்சைமுகைதீன் அறிவானந்தம் அவர்கள் நன்றி கூறினார்கள். பேரிடர் மேலாண்மைத் திட்ட பயிற்சியாளர் ஆனந்தகுமார், கிரஸ்சன்ட் பிளட் டேணர்ஸ் மாவட்டதுணைதலைவர் அக்லன்கலிஃபா மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்ட அலுவலர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கிராம பேரிடர் மேலாண்மை அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)