அதிரையில் மாட்டுவண்டி மீது வாகனம் மோதி விபத்து மாடு பலி ஒருவர் காயம்

Posted June 28, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தை  சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் இன்று அதிகாலை அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரை
சாலையில் மாட்டு வண்டியில் எருது உரத்தை அள்ளிவரச்சென்றுக்கொண்டிருந்தார்  அப்போது  திருவாரூரிலிருந்து அம்மாபட்டினத்தை  நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் மாட்டுவண்டியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது . மற்றொரு மாடு படுகாயமடைந்தது. மாட்டுவண்டியை ஓட்டிச்சென்ற ராமகிருஷ்னன் லேசான காயங்களுடன் அதிராம்பட்டினம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக  சேர்க்கப்பட்டது இதனையடுத்த தகவலறிந்த அதிராம்பட்டினம்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் பலத்த சேதமடைந்த வாகனத்தை கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து அப்புறப்படுத்த போலீஸ் டிப்பர் வாகனம் வரவழைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. இந்த  விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.




0 comment(s) to... “அதிரையில் மாட்டுவண்டி மீது வாகனம் மோதி விபத்து மாடு பலி ஒருவர் காயம்”