ஆலங்குடி அருகேயுள்ள அணவயலில் நடந்த பேயோட்டும் திருவிழாவில் பேய்பிடித்து ஆடும் பெண்களுக்கு பேய்விரட்டப்படுகிறது.
Posted June 21, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் அம்பேத்கார் நகர் மக்களின் தெய்வமான நொண்டி அய்யனார், பிடாரி அம்மன் கோயில்
விளங்கிவருகிறது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடந்துவருகிறது. இதன் முதல் நாள் நிகழ்ச்சியில் புரவி எடுப்பு நிகழ்ச்சியும் அடுத்த நாள் மது எடுப்பு திருவிழாவும் நடந்தது.
மூன்றாம் நாள் திருவிழா கிராமத்தின் மையத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயிலில் தொடங்கியது. இதில் கோயிலில் தடி, மணி, பட்டு மற்றும் பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பூசாரிகளுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் நூற்றுக்கணக்கான தாலிகளை கொடுத்தனர். இதனை கழுத்தில் அள்ளிப் போட்டுக்கொண்ட பூசாரிகள் கையில் விபூதி, சந்தனம், குங்குமம் பூஜப்பட்டு தடி கொடுத்தனர். அதன் பிறகு பேய் பிடித்துள்ளதாக சொல்லப்பட்ட பல பெண்கள் இவர்கள் முன்பு வந்து தலையை விரித்துப்போட்டுக் கொண்டு ஆடினார்கள். அந்த பெண்களிடம் சென்ற பூசாரிகள் நீ யாரென்று எனக்குத்தெரியும் என்னைப்பற்றி தெரியுமுள்ள ஒழுங்கா இந்தபொண்ண விட்டு ஓடிப்போ என்று அதட்டினர். இதனால் சிலபெண்கள் மயக்கமடைய பேய் அவர்களை விட்டுச்சென்றதாக விபூதி பூசி அனுப்பிவைத்தனர். ஆனால் சிலபெண்கள் இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று பேசாமல் நின்றனர். இதனால் என்னையே எதிர்த்துப்பார்க்கிராயா என்றுகூறிக்கொண்டு கோபமடைந்த பூசாரிகள் அந்த பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து அசைத்தனர், தடியால் அடித்தும் ஓடாத பெண்களின் தலையில் பூசாரிகள் தங்கள் தலையால் மோதியும் போகவில்லை. அதனால் இறுதியாக எருக்கன் குச்சிகளைக் கொண்டு அவர்களை அடித்து ஓடச் செய்தனர். அதன் பிறகு ஊரின் கடைசியில் உள்ள மயாணக்கரைவரை அந்த பெண்கள் ஓடினார்கள். இவர்கள் பாதிவழியில் திரும்பி வந்துவிட்டால் பேய் அவர்களுடன் வந்துவிடும் என்பதற்காக அந்தபெண்களின் பின்னால் பல இளைஞர்களும் ஓடி மயாணக்கரை வரை விரட்டிச் சென்றனர். இந்நிலையில் பேய்பிடித்திரப்பதாக திருமணமாகாத ஒரு இளம் பெண் நீண்ட நேரம் ஆடிக்கொண்டு நின்றார். அவரிடம் பூசாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் நீண்ட நேரம் நின்றார். இதனால் கோபமடைந்த பூசாரிகள் எருக்கன் குச்சியால் அடித்த பிறகு அந்த இளம் பெண்ணும் ஓடினார். இதுபோல் பேய்பிடித்திருப்பதாக வந்த ஏராளமான பெண்களுக்கு பேய் விரட்டப்பட்டது. இதனால் பேய்பிடித்துக் கொண்டு மாதக்கணக்கில் உடல்நிலை மற்றும் மனநிலை சரியியல்லாமல் இருந்த பெண்கள் பூசாரிகள் பேயோட்டிய பிறகு எல்லா நோய்களும் சரியாக நலமாக இருப்பார்கள் என்று இப்பகுதி மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
படவிளக்கம்....... ஆலங்குடி அருகேயுள்ள அணவயலில் நடந்த பேயோட்டும் திருவிழாவில் பேய்பிடித்து ஆடும் பெண்களுக்கு பேய்விரட்டப்படுகிறது.
செய்திகள் ஆலங்குடி சந்திரசேகர்
0 comment(s) to... “ஆலங்குடி அருகேயுள்ள அணவயலில் நடந்த பேயோட்டும் திருவிழாவில் பேய்பிடித்து ஆடும் பெண்களுக்கு பேய்விரட்டப்படுகிறது.”