கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஆடு. 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை.

Posted June 24, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் கொய்யா ஹபீப் முகம்மது அலி. இவரது வீட்டில் பழமை வாய்ந்த 100 அடி உயரம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இதில் நேற்று மதியம்
அதே பகுதியைச் சேர்ந்தவரின் ஆடு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 10 அடி உயரத்தண்ணீரில் நீந்தியப்படி ஆடு உயிருக்கு போராடி சத்தம் போட்டது. உடன் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக கூடி ஆட்டை உயிருடன் மீட்க போராடினர். முடியவில்லை. உடன் முத்துப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலை அலுவலர் சந்திர சேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்செழியன், முகம்மது நவாஸ், செல்வம், பிரபாகரன் ஆகியோர் கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டு கயிற்று மூலம் மேலே கொண்டு வந்தனர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட ஆடு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது. மனித நேயத்துடன் ஆட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.

படம் செய்தி: 
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஆடு. 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை.”