துபாயில் பெண்கள் கழிவறையை எட்டிப் பார்த்த இந்தியர் சிறையில் அடைப்பு
Posted June 23, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இது தொடர்பாக புகார் அளித்த சவூதியை சேர்ந்த மொழி பெயர்ப்புப் பணி செய்யும் பெண்மணி கூறுகையில் , " கழிவறையில் இருந்த போது கான்கிரீட் சுவருக்கு பின்னால் இருந்து ஆண் ஒருவர் என்னைப் பார்ப்பதை கண்டுபிடித்தேன். சுமார் 4 அல்லது 5 நிமிடங்களுக்கு அவர் என்னைக் கவனித்துள்ளார்.
கழிவறைக்குள் நுழைந்தபோது வாசலில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.பின்னர் பெண்களின் கழிவறைக்கு உள்ளே வந்துள்ளார். நான் உள்ளே இருக்கும் வரை வேறு எந்தப் பெண்களும் வரவில்லை.பின்னர் நான் கூச்சலிட்டதால் அந்த நபர் வெளியே சென்றுவிட்டார். இது குறித்து துபாய் போலீசில் புகார் அளித்தேன்" என்றார்.
புகாரின் பேரில் கழிவறையை சுத்தம் செய்யும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றிக் கூறிய மேலாளர்," கழிவறையை யாரும் இல்லாதபோது சுத்தம் செய்ய தொழிலாளி அனுமதிக்கப்பட்டிருந்தார்.அது சிறிய இடம்.வேறு யாராவது உள்ளே சென்று இருந்தால் எளிதாக தெரியும். உள்ளே ஆள் இல்லை என்று உறுதி செய்த பின்னரே சென்று இருக்கவேண்டும்" என்றார்.
0 comment(s) to... “துபாயில் பெண்கள் கழிவறையை எட்டிப் பார்த்த இந்தியர் சிறையில் அடைப்பு”