அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-(படங்கள் இணைப்பு)
Posted November 29, 2016 by Adiraivanavil in
அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதிராம்பட்டினம்,நவ-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேதுரோடு முதல் காதர்முகைதீன் கல்லூரி வரையிலான கிழக்குகடற்கரை சாலை பகுதிகளில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்ற உத்தரவையடுத்து. அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்துறை பொதுப்பணித்துறை காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள்; ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். அப்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிடம் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை குறிபிட்ட கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.; இதனையடுத்து நவ.28-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென கால கெடு நிர்ணயத்த நிலையில் சிலர் நேற்று முன்தினம் முதல் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டடங்களை ஊழியர்களை கொண்டு இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அவர் அவர்களே அகற்றிக் கொண்டனர். அகற்றபாடத ஆக்கிரமிப்புகளை பட்டுக்கோட்டை ஆர்.டி.ஒ கோவிந்தராசு ஏ.எஸ்.பி அரவிந்தமேனன் தாசில்தார் ரவிசந்திரன் மற்றும் பொதுபணிதுறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றினார்கள்
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-(படங்கள் இணைப்பு)”